மசூதியை ஆய்வு செய்யும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ள இடம் கிருஷ்ணர் பிறந்துள்ள இடம் என்றும், அதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த இடத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு உத்திர பிரதேச அரசு மற்றும் எதிர் மனுதாரர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC order intermediate stay on up mosque case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->