பங்குனி உத்திர திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதி.!
Sabarimalai Ayyappan temple panguni uthiram festival
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (மார்ச் 27ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (மார்ச் 26ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் நாளை பூஜைகள் எதுவும் செய்யப்படாது.
நாளை மறுநாள் (மார்ச் 27ஆம் தேதி) காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5ம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10வது நாள் திருவிழா நிறைவு பெறும்.
English Summary
Sabarimalai Ayyappan temple panguni uthiram festival