ஆர்பிஐ வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: குஜராத்தை சேர்ந்த 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கி மற்றும் ஐசிஐசி வங்கிகளுக்கு நேற்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

மேலும் ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 

இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் மிரட்டல் தொடர்பாக குஜராத் வதோதராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஏமாற்று வேலை என தெரிய வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI bomb threat case 3 arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->