கழிவுநீர் கால்வாயில் சிக்கிய முதலமைச்சரின் கார்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா கடந்த 15-ந்தேதி பதவியேற்றார். அதன் பின், பஜன்லால் சர்மா முதல் முறையாக அவரது சொந்த ஊரான பரத்பூருக்கு நேற்றைய தினம் சென்றார்.

அங்கு, தனது மனைவியுடன் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிரிராஜ் கோவிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது, கார் புஞ்சாரி என்ற பகுதியில் சென்றபோது, சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரின் முன்பக்க டயர் கழிவுநீர் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா மற்றும் அவரது மனைவி இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு காரில் ஏறி மதுரா சென்றடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan cm bajanlaal sharma car drowned drinage water


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->