ராகுல்காந்தி ஹெலிகாப்டர் பயணம் திடீர் ரத்து.!
ragul gandhi helicoptar travel cancel
இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று மத்தியபிரதேச மாநிலம் மாண்ட்லா மற்றும் ஷாதோல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அதன் பின்னர், ஜபல்பூருக்கு சென்று, அங்கிருந்து தலைநகர் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், ஷாதோலில் மோசமான வானிலை நிலவி வந்ததன் காரணமாக ராகுல்காந்தி செல்லவிருந்த ஹெலிகாப்டரால் புறப்பட முடியவில்லை. இதனால் ராகுல் காந்தி ஷாதோலில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று இரவு தங்கி விட்டு நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
ragul gandhi helicoptar travel cancel