#புனே || ரயில் நிலையத்தின் பொதுக்கழிப்பறையில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!
PUNE Railway station toilet incident
புனே ரயில் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் வைத்து 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புனே ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சிறுமி ஒருவர் பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் கழிவறையின் கதவை பூட்டிவிட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கழிவறைக்கு சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வராததால், அவரின் உறவினர் கழிவறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். அப்போது உள்ளே இருந்த நபர் கதவை திறந்து, உறவினரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவே, புகாரின் பெயரில் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் 35 வயது உடையவர் என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் புனே ரயில் நிலையத்தின் பொது கழிப்பறையில் சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
PUNE Railway station toilet incident