குழந்தைகளின் விளையாட்டு வினையான சம்பவம்! சோகத்தில் குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருபவர். இவரது மனைவி விஜயலட்சுமி. 

இவர்களுக்கு யோகனா (வயது 12), சஞ்சு ஸ்ரீ (வயது 9), சஞ்சனா, சாய் ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல் சஞ்சனா மற்றும் சாய் இருவரும் வாசலில் இருந்த இரும்பு கேட்டில் தொங்கிய படி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரும்பு கேட் சுவருடன் இடிந்து விழுந்ததில் சஞ்சனா மற்றும் சாய் அடியில் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சுவரின் கீழே சிக்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை மீட்டனர். 

பின்னர் உடனடியாக குழந்தைகளை காரைக்கால்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். 

அதன் பேரில் 2 குழந்தைகளையும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில் சிறுமி சஞ்சனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். 

சாய் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry girl died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->