பர்த்டே ஸ்பெஷலாக சரக்கு பார்ட்டி கொடுத்த பெண்.. போதையில் நடுரோட்டில் நண்பரால் நிகழ்ந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் மோனிஷா என்ற இளம்பெண் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார்.

இளம்பெண் மோனிஷாவை தவிர மற்ற அனைவரும் நல்ல போதையில் சாலையில் நின்று கொண்டு இருந்த பொழுது, முத்துப்பிள்ளை பாளையம் பகுதியைச் சேர்ந்த விஷால் எனும் இளைஞர் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்துள்ளார்.

அந்த நேரத்தில் மோனிஷாவின் நண்பர்களில் ஒருவரான முகேஷ் அளவுக்கதிகமான மதுபோதையில் சாலையின் குறுக்கே நின்றவாறு பைக்கில் வந்த விஷாலை தாக்க முயற்சித்துள்ளார். இதில், விஷாலின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி, அருகில் இருந்த ஒரு மரத்தில் மோதியது.

இதில் விஷால் அதிக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  கூறியுள்ளனர்.
இது பற்றி போலிசார் வழக்கு பதிந்த  நிலையில், மோனிஷா, முகேஷ் இருவரை தவிர மற்ற 5 நண்பர்களும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhucherry birthday party Died in accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->