#BREAKING :: சென்னை-புதுச்சேரி இடையே அரசு பேருந்து சேவை ரத்து..!! புதுச்சேரி போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுவிழுந்த நிலையில் வட தமிழக கடற்கரை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாண்டவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதன் காரணமாக புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை மற்றும் காரைக்காலுக்கு செல்லும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாக புதுச்சேரி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்த பிறகு வழக்கமான போக்குவரத்து சேவை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PRTC bus service between Chennai-Puducherry canceled


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->