முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பாராட்டு - Seithipunal
Seithipunal


மன்மோகன் சிங் உள்ளிட்ட ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ராஜ்யசபாவில் நடந்த பிரிவு  உபசார விழா உரையில் , பிரதமர் மோடி பேசியதாவது: 

மன்மோகன் சிங் பணிகளை  நினைவு கூற விரும்புகிறேன். அவரின் பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம், அவையையும், நாட்டையும் அவர் வழிநடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழிநடத்த செய்கிறார். ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர் அவர். 

PM Modi lauds Manmohan Singh in RS farewell speech: 'The way he has  guided…' | Latest News India - Hindustan Times

நாடாளுமன்றத்தில்  நடந்த ஓட்டெடுப்பு ஒன்றில், ஆட்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிந்தும், மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். ஒரு உறுப்பினர் தனது கடமையை எப்போதும் வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இநதியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியவர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. 

இவ்வாறு பிரதமர் மோடி மன் மோகன் சிங்கை புகழ்ந்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi to former Prime Minister Manmohan Singh Appreciation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->