நாளை முதல்....உலகமெங்கும் 5 ஜி சேவை..!   - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். 

இதுமட்டுமின்றி இந்திய மொபைல் காங்கிரசின் 6-வது பதிப்பையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது ஐ.எம்.சி. 2022 "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் இதில் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi start 5G


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->