வரும் ஜூன் 15ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோநோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5-ம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். அந்த வகையில் சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோநோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupadi Murmu comes to tamilnadu on June 15


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->