பாஜக தலைவர் கார் கண்ணாடி உடைப்பு.. சாமிநாதன் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அங்குள்ள காலாப்பட்டு அருகேயுள்ள தமிழக பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். இந்த பள்ளி வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளை காணுவதற்கு நேற்று மதியம் அங்கு சென்றுள்ளார். 

காரை சாலமன் என்பவர் இயக்கிய நிலையில், புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், காரின் பின்புற கண்ணாடி நொறுங்கியுள்ளது. 

அதிர்ச்சியடைந்த சாமிநாதன் காரை நிறுத்த சொல்லவே, மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவிக்கையில், " கோட்டக்குப்பம் பகுதியில் வாகனம் செல்கையில், பின்பக்க கண்ணாடியில் கல் ஒன்று விழுந்தது. இதனால் காரின் கண்ணாடி உடைந்தது. காரை நிறுத்தி பார்த்தபோது யாரையும் காணவில்லை. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry BJP Leader car attacked by strangers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->