நடுரோட்டில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.! பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் நடுரோட்டில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு புலிகேசி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு நபர் வாளுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த இளம்பெண் ஒருவரை வழிமறித்த அந்த நபர், அந்தப் பெண்ணிடம் இருந்து செல்போனை பிடுங்கியுள்ளார். மேலும் நடுரோட்டில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த அவ்வழியாக வந்த பெண் ஒருவர் ஓடிவந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் செல்போனை இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து, நடுரோட்டில் வாளுடன் சுற்றித் திரிவது மற்றும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புலிகேசி நகர் போலீசார் வீடியோ காட்சிகள் மூலம் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation for sexually harassing a young woman in bangalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->