பயிற்சியின் போது மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பயிற்சியின் போது மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் கடந்த ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாக கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். 

விஜய் இந்தப் பயிற்சி முடிந்து வருகிற ஜூன் மாதம் காவலர் பணிக்கு செல்ல இருந்த நிலையில், விஜய் பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த சக பயிற்சியாளர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விஜய் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் ஒருவர் பயிற்சியின் போது உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police constable died training in puthuchery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->