கடுமையான குளிர் அலை | வரும் 14 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம், பாட்னாவில் கடுமையான குளிர் அலை காரணமாக வரும் ஜனவரி 14-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஹிமாச்சல் பிரதேசம், தலைநகர் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதில் குறைந்தபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிரானது பதிவாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடுமையான குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் பலியாகி சோக சம்பவமும் அரங்கேறி உள்ளது.

மேலும் கடுமையான குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான இந்த குளிர் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 14-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patna school leave cold


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->