இரும்பு பெட்டியில் வந்து தங்கக் கட்டிகள்.!! மொத்தமாக அள்ளிய பறக்கும் படை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியில் தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

தங்கம் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flying squad seized Rs17 Crs worth gold in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->