ஜம்மு: சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.!
Pakistani shot dead while trying to enter india border jammu
ஜம்மு சர்வதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளார்.
இதைப் பார்த்த பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த நபரை சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து சுடப்பட்ட பாகிஸ்தானியர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இதேபோல், ஜம்முவின் இந்திரேஷ்வர் நகரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த ஒரு நபரை கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Pakistani shot dead while trying to enter india border jammu