ஜம்மு காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ஆழமான பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் இருவர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் நேற்றிரவு இரவு சென்று கொண்டிருந்தபோது, ​​ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி, பானி அருகே உள்ள மங்கியாரில் 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கதுவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One family members 3 killed in car accident in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->