#BREAKING || நாட்டிலேயே ஒமைக்ரான் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம்.! ஒட்டுமொத்தமாக இதனை பேருக்கு பாதிப்பா?! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 781 பேர் ஒமைக்ரான் வகை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த 789 பேர்களில் 241 பேர் குணமடைந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 540 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக நாட்டில் அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 238 பேர் ஒமைக்ரான் வகை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக குஜராத் மாநிலத்தில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கேரளா மாநிலத்தில் 65 பேரும், தெலுங்கானா மாநிலத்தில் அறுபத்தி இரண்டு பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பத்தி ஆறு பேரும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலா 45 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OMICRON IN INDIA REPORT DEC 29


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->