புதுச்சேரி || பீடி பற்ற வைத்த முதியவர்.! தீப்பிடித்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பீடி பற்ற வைத்த முதியவர் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

புதுச்சேரி வடக்கு பாரதிபுரம் சத்யமூர்த்தி தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு(80). இவருடைய மனைவி இறந்து விட்டதால், தனியாக வசித்து வந்தார். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாலும், வயது முதிர்ச்சி காரணமாகவும் பார்வை குறைபாடு இருந்துள்ளது.

இந்நிலையில், வடிவேலு சம்பவத்தன்று பீடி பிடிப்பதற்காக பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தீக்குச்சி இவரது உடையில் விழுந்து தீப்பிடித்து உள்ளது. தீயானது உடல் முழுவதும் பரவியதால் வடிவேலு, வலியால் சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே இதுகுறித்து வடிவேலின் மருமகள் கலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து மருமகள் கலா மற்றும் பேரன் விஜயகாந்த் ஆகியோர் வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வடிவேலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வடிவேலின் பேரன் விஜயகாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man caught fire after lighting a beedi in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->