இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து 4 பவுன் நகை திருட்டு - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தாய அருமை கண்ணு. சமீபத்தில் இவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு அன்பழகன் ஏற்பாடு செய்தார். அதன்படி குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்த, திருநள்ளாறு தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவருடைய நண்பர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இரண்டு பேரும், மூதாட்டியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்தனர். 

அப்போது, மூதாட்டியின் உடலில் இருந்த நான்கு பவுன் தங்க நகையை திருடியுள்ளனர். இதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது தொடர்பாக அன்பழகன் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைப்பதற்கு வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து விசாரணை செய்தனர். 

அந்த விசாரணையின் போது, மூதாட்டியின் உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து நான்கு பவுன் தங்க நநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thirunallaaru two peoples arrested for gold steal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->