உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்று வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிலர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் நேற்று இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அந்த காரில் மொத்தம் பன்னிரெண்டுப் பேர் பயணித்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்ஹர் மாவட்டம் மங்கல்வாட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த பன்னிரண்டு பேரில் நான்கு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajastan car accident 4 people died


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->