மொகரம் ஊர்வலத்தில் இந்திய தேசியக் கொடியில் உருது வார்த்தை! தீவிர விசாரணையில் போலீஸ்!
Muharram procession national flag Ashoka Chakra Remove issue
ஜார்கண்ட் : மொகரம் ஊர்வலத்தின்போது ஏந்திய தேசியக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தை எழுதப்பட்டிந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம், மேதினிநகர் மாவட்டத்தின் கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் நேற்று மொகரம் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் சிலர் தேசிய கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில், உருது வார்த்தைகளால் எழுதி, அதனை கையில் ஏந்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தேசியக் கொடியை அவமரியாதை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Muharram procession national flag Ashoka Chakra Remove issue