மகன் கண்முன்னே கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! தாய் செய்த காரியத்தால், மகனுக்கு போன உயிர்.!
mother kill son for illegal affair
உலகெங்கும் கள்ளக்காதலால் நடக்கும் கொலைகள் அதிகரித்து வருகின்றது. கடந்த வாரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் புது வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய குழந்தையை கொலை செய்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இப்பொழுது, அது போலவே தெலுங்கானா மாவட்டத்தில் அரங்கேறி இருக்கின்றன. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணிக்கும், அவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும் 60 வயதான ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அவருடைய கணவருக்கு தெரிய வந்தது. எனவே ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணவர் கண்டித்துள்ளார்.
இருப்பினும், அதனை மதிக்காமல் அவர்களுடைய கள்ளக்காதல் ஆனது தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்காதலர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்ததை அந்தப் பெண்ணின் மகன் பார்த்து விட்டார்.
ஒன்பது வயதான அந்த சிறுவன் சென்று தன்னுடைய தந்தையிடம் கூறி விடுவான் என்று பயந்து அந்த பெண் ஆத்திரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து தன்னுடைய சொந்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கின்றார். பின்னர் அவர் இயற்கை முறையில் மரணம் அடைந்ததை போல நாடகமாடி இருக்கின்றார். விசாரணையில் உண்மை தெரியவர காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர்.
English Summary
mother kill son for illegal affair