மும்பை: அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி விழுந்து... ஆட்டோவில் சென்ற தாய்-மகள் பலி.!! - Seithipunal
Seithipunal


மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பி விழுந்து ஆட்டோவில் சென்ற தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜோகேஸ்வரி மேற்கு விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 14 மாடி கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து இரும்பு கம்பி ஒன்று ஆட்டோ மீது விழுந்துள்ளது. இதில் ஆட்டோவில் சென்ற சிறுமி மற்றும் பெண் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமி அந்தேரியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள், தாய் ஷாமா பானோ ஆசிப் ஷேக் (28) மற்றும் அவரது மகள் அயத் ஆசிப் ஷேக் (9) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother Daughter Killed After Iron Rod Falls on Auto in mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->