நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்.! பத்ரா அணையில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் பத்ரா அணையில் மூழ்கி மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த ஜகத் என்பவர் சிவமெக்காவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சிவராத்திரியையொட்டி பத்ரா அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஜகத் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார்.

இதைப்பார்த்த நண்பர்கள் அதிர்ச்சடைந்து உடனடியாக ஜகத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஜகத் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஜகத்தின் உடலை நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical student drowned in Bhadra Dam in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->