காளியம்மன் சிலை காலடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை., பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில், காளி அம்மன் சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை வைக்கப்பட்டிருந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தின் சாலை ஓரத்தில் ஒரு காலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் காளி அம்மன் சிலையின் காலடியில், மனிதத் தலை துண்டிக்கப்பட்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மனித தலையை மீட்டு, கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு 30 வயது இருக்கும் என்றும், அந்த நபர் வேறு ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, தலை மட்டும் இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் கொள்கின்றனர்.

மேலும் நரபலி கொடுக்கப்பட்டதாக என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் கோஷ்டி மோதல் சம்பந்தமாக அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தலையை வெட்டிக்கொண்டு காளியம்மன் சிலையின் காலடியில் வைத்து விட்டு சென்றுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடல் இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தலை துண்டிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக புகைப்படங்களை போலீசார் பகிர்ந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mans Head Found Telangana


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->