மருத்துவமனையில் புகுந்து இளம்பெண்ணை குத்திக் கொன்ற இளைஞர்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
Man attack and killed women in Kerala
கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் லிஜி ராஜேஷ். இவரது தாயார் உடல்நலக்குறைவால் அவதிபட்டார். இதனையடுத்து அவர் அங்கமாலி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
லிஜி ராஜேஷ் அங்கு தனது அம்மாவை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென லிஜியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திடீரென லிஜியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இதில், படுகாயமடைந்த லிஜியை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அந்தப் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்த மருத்துவமனை ஊழியர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அந்த இளைஞர் பெயர் மகேஷ் என்றும் அவர் அலுவா என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மகேஷும், லிஜியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு லிஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகேஷ் உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
மேலும் வீட்டில் பார்த்த வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்து உள்ளார். இதனால் மனவிரக்த்தியில் இருந்த இளைஞர் லிஜியை, மகேஷ் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Man attack and killed women in Kerala