மகாராஷ்டிரா || கசந்து போன 10 ஆண்டு காதல் - நொடியில் காதலன் செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் ஹிஞ்சாவாடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கடந்த 25-ந்தேதி ஜோடி ஒன்று வந்து அரை எடுத்து தங்கி பகலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் அறைக்கு திரும்பியுள்ளது. 

இந்த நிலையில், அந்த ஜோடியில் இளம்பெண் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு ஓட்டல் அறையில் கிடந்துள்ளார். இதையறிந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். 

இதில், அந்தகொலை செய்யப்பட்ட இளம்பெண் வந்தனா திவிவேதி என்பதும், இவர் ரிஷாப் நிகாம் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் 
நிகாம்க்கு காதலியின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்துள்ளதனால், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் நிகாம் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.

அதன் படி நீக்கம் கடந்த சனிக்கிழமை வந்தனாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, இரவு 10 மணியளவில் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, போலீசார் தப்பி சென்ற நிகாமை கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for murder case in maharastra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->