கிளவுஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: ஊழியர்கள் பரிதாப பலி!
Maharashtra gloves factory fire 6 dead
மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் செயல்பட்டு வரும் கிளவுஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இரவு தொழிற்சாலையை மூடிவிட்டு உள்ளே உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.40 மணியளவில் திடீரென கிளவுஸ் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளே உறங்கி கிடந்த 6 ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு மீட்கப்பட்ட 6 ஊழியர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிளவுஸ் தொழிற்சாலையில் அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Maharashtra gloves factory fire 6 dead