பரபரப்பு... அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
Maharashtra apartment building fire accident
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, டோம்பிவ்லியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஏழாவது தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து வேகமாக 18 வது தளம் வரை பரவியது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வசித்த அனைவரும் உடனடியாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Maharashtra apartment building fire accident