வீட்டில் தூங்கிய சகோதர, சகோதரிகள் 4 பேர் கொடூர கொலை... அதிரவைக்கும் சம்பவம்.!
Maharashtra 4 brother and sisters murder police investigation
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜலேகாவ் ராவர் கிராமத்தை சார்ந்தவர் முஸ்தாக். இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ள நிலையில், இத்தோட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்த கார்கானை சார்ந்த கிதாப் குலாப் என்ற நபர் குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார்.
இவரது உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சொந்த ஊருக்கு மனைவி மற்றும் மூத்த மகளுடன் சென்றுள்ளார். தோட்டத்தில் பிற பிள்ளைகளான சங்கீதா (வயது 13), ராகுல் (வயது 11), அணில் (வயது 8), நாணி (வயது 6) ஆகியோர் இருந்துள்ளார்.
அதிகாலை நேரத்தில் தோட்டத்தின் உரிமையாளரான ஷேக் முஸ்தாக் தோட்டத்திற்கு சென்ற நிலையில், சகோதர சகோதரிகள் நால்வரும் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் நால்வரும் கோடரியை வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra 4 brother and sisters murder police investigation