பிரசவத்திற்கு வரும் பெண்கள் டார்கெட்.. 13 வருடமாக குழந்தையை திருடி விற்பனை செய்த நர்ஸ் கைது.!
Madhya Pradesh Nurse Arrest by Police Kidnap Born baby and Sales
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் லீலா பாய். இவர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களின் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மேலும், இவருக்கு உடந்தையாக 7 பேர் கொண்ட கும்பலே இருந்து வந்த நிலையில், கடந்த 13 வருடத்திற்கு முன்னதாக குழந்தையை திருடி குழந்தை இல்லாத தம்பதிக்கு வழங்கி இருக்கிறார். இந்த கடத்தல் தொடர்பான தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையிலேயே கடந்த 13 வருடமாக லீலா பாய் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது அம்பலமானது. இவர் கொடுத்த தகவலின் பேரில், குழந்தையை வாங்கிய தம்பதிகள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madhya Pradesh Nurse Arrest by Police Kidnap Born baby and Sales