எல்லைதாண்டி வருவாயா? பாகிஸ்தான் காதலன் அழைக்க... எல்லை தாண்ட முயன்ற இளம்பெண் தடுத்து நிறுத்தம்.!
madhya pradesh love issue Pakistan
பாகிஸ்தான் இளைஞர் ஒருவரை சமூக வலைதளம் மூலமாக காதலித்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், எல்லை தாண்டி அவரை சந்திக்க முயன்ற போது காவல்துறையினர் பிடித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் இசாகான். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தில்ஷாத் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இசாகான் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கிய போது, பாகிஸ்தான் செல்வதற்கான விசாவை இசாகான் பெற்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்ட போலீசார், பஞ்சாப் மாநிலம் அருகில் எல்லையை கடக்க முயன்ற இசாகானை தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் மத்தியபிரதேச போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
காதலனுக்காக சொந்த நாட்டை விட்டு, எல்லை தாண்ட முயற்சித்த இளம்பெண்ணின் செயலைக் கண்டு அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
English Summary
madhya pradesh love issue Pakistan