இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்.. நினைவு தினம்! - Seithipunal
Seithipunal


கே.ஆர்.நாராயணன்:

இவர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (ஐ.கு.ளு) சேர்ந்து ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றினார்.

பின்பு 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர், ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில், மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இவர் 1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1997ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த கே.ஆர்.நாராயணன் 2005ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kp narayanan memorial day


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->