குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் - கேரள காவல்துறை உறுதி..!
kerala police confirm martin carried blast
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 35 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் தானாக சரணடைந்தார். மேலும், வீடியோ ஒன்றையும் அந்த நபர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என்று பேசியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில், கேரளா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் என்று கேரள காவல்துறை உறுதிபடுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் வீட்டிலும் போலீசார் சோதனை செய்து, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், ரிமோட் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
English Summary
kerala police confirm martin carried blast