அப்டேட் : உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 6 பேரை கொன்ற ஜோலி.!
kerala murder case update
கேரள மாநிலத்தில் கணவருக்கு சையனைடு விஷம் கொடுத்து கொலை செய்த ஜோலி மேலும் 5 பேரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் நடந்தவற்றை நகலாக நிகழ்த்திக் காட்டச் சொல்லி அதனை படமெடுத்துக் கொண்டார்கள்.
பணம், ஆடம்பர உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜோலி உள்ளிட்ட 3 பேரையும் அடுத்த புதன்கிழமை வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோழிக்கோடு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதை தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய போலீசார், மற்ற 5 கொலைகளுக்கான ஆதாரத்தைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கொலைகள் நிகழ்ந்த இடங்களுக்கு ஜோலியை அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
English Summary
kerala murder case update