2 கல்யாணம் பண்ணியும் அடங்காத கொடுக்கு.. 3 ஆவது கள்ளக்காதலுக்கு குழந்தை பலி?.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாவட்டம் பிடதி பகுதியை சார்ந்தவர் சித்திக். இவருக்கு இரண்டு மனைவிகள் என்று கூறப்படுகிறது. அங்குள்ள துமகூரு பகுதியை சார்ந்தவர் சல்மா. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், பெங்களூரில் இருக்கும் நிறுவனத்தில் சித்திக்கும் - சல்மாவும் பணியாற்றி வந்துள்ளனர். 

இதன்போது, இவர்களுக்குள் கள்ளக்காதல் பழக்கம் ஏற்படவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், இருவரும் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில தினத்திற்கு முன்னதாக கருத்து வேறுபாடு காரணமாக சித்திக்கை சல்மா பிரிந்து சென்றுள்ளார். 

இதனையடுத்து, துமகூருவில் இருக்கும் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற சல்மா பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக சல்மாவின் வீட்டிற்கு சென்ற சித்திக், சல்மாவின் 10 மாத குழந்தையை கடந்து சென்றுள்ளார். 

மேலும், சல்மாவின் சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட சித்திக், சல்மாவை என்னுடன் அனுப்பி வைத்தால் மட்டுமே குழந்தையை தருவேன் என்றும், தான் மைசூரில் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளான். இதனையடுத்து, சல்மாவை அனுப்பி வைத்த குடும்பத்தினர் குழந்தையை வாங்கி வர அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், மைசூருக்கு சென்ற சல்மாவும் வீட்டிற்கு திரும்பாத நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து, சல்மா மற்றும் குழந்தையை தேடி வந்தனர். 

விசாரணையில், சல்மா மற்றும் சித்திக் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரெ பகுதியில் பதுக்கினியிருப்பது உறுதியான நிலையில், அங்கு விரைந்த காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடிகளை கண்டறிந்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கொலை செய்து ஹேமாவதி ஆற்றில் வீசிவிட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய கிராம மக்கள், கள்ளக்காதல் ஜோடியை கம்பத்தில் கட்டிவைத்து காவல் துறையினர் முன்னிலையிலேயே நொறுக்கி எடுத்தனர். அடித்தாங்க முடியாத சித்திக் குழந்தையை கொலை செய்யவில்லை, ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். 

ஆனால், குழந்தையின் உண்மை நிலை என்னவென்று தெரியாத நிலையில், குழந்தையை துமகூருவில் உள்ள ஒருவரிடம் கொடுத்து வைத்ததாக கொடுத்த தகவலின் பேரில், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Ramanagara District Affair Couple Murder Mystery Baby Police Investigation 5 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->