கர்நாடகா :: 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - காபித்தோட்ட உரிமையாளர் பலி - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் காபி தோட்ட உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சன்னகோடனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் காபி தோட்ட உரிமையாளர் ரகு (40). இவர் வழக்கம் போல மலைப்பகுதி அருகே உள்ள தனக்கு சொந்தமான காபி தோட்டத்திற்கு ஜிபில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒசபுரா வளைவு பகுதி அருகே ஜீப் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பை இடித்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த பயங்கர விபத்தில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கி நிலையில், இடிபாடுகளில் சிக்கி காபி தோட்ட உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய ஜீப்பை அகற்றிவிட்டு உயிரிழந்த காபி தோட்ட உரிமையாளரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeep overturned in 100 feet ditch in Karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->