8 மணி நேர கிடுக்குப்புடி விசாரணை - இறுதியில் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முதல்வர்.!
jarkhant cm hemant soren arrest
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை ஆகிய குற்றங்களுக்காக இன்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநரை சந்தித்த ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அந்தக் கடிதத்தை ஆளுநர் இராதாகிருஷ்ணனும் ஏற்றுக் கொண்டார். ஹேமந்த் சோரன் பதவி விலகியதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளன.
English Summary
jarkhant cm hemant soren arrest