இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் படகு - ரூ.280 கோடி போதைப் பொருள், 9 பாகிஸ்தானிகள் கைது.!
Indian oceans Pakistani boat in drug 9 Pakistanis arrested
குஜராத் மாநிலம் அருகில் இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. மேலும், அரபிக் கடலின் எல்லையில் நுழைந்து படகினை இந்திய கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரும் பிடித்தனர்.
காவல்துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த பாகிஸ்தான் படகில் சுமார் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் இருந்தது. மேலும், அந்த படகில் இருந்த 9 ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் அந்த படைகினையும், அதிலிருந்து 280 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அந்த படகில் இருந்து கைது செய்யப்பட்ட 9 ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள், கட்ச் மாவட்டத்தில் உள்ள துறைமுகத்துக்கு தொடர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
English Summary
Indian oceans Pakistani boat in drug 9 Pakistanis arrested