நாங்க என்ன வானிலை அறிக்கையா சொல்லிட்டு இருக்கோம்?. 3 ஆவது அலை விவகாரத்தில் மருத்துவர்கள் சங்கம் கொந்தளிப்பு.!
Indian Medical Research Council Warn about Corona 3 rd Wave
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை முடிந்த சில மாதங்கள் கழித்து, இரண்டாவது கொரோனா அலை வீரியமெடுத்து தாக்கியது. இரண்டாவது கொரோனா அலையால் கடுமையான அளவு பாதிக்கப்பட்ட இந்தியா, படிப்படியாக மீண்டும் வருகிறது.
இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கொரோனா 3 ஆவது அலைபரவல் ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும், ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை மக்கள் வானிலை அறிக்கை போன்று எடுத்துக்கொண்டு, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற விஷயங்களை கடைபிடிப்பதில்லை எனவும் சுட்டிக்காண்பிக்கின்றனர்.
மத்திய - மாநில அரசுகளும் இது தொடர்பாக பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், மக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அலட்சியமாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளி இல்லாமல் செயல்பட்டது பெரும் கண்டனத்தை சந்தித்து, பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல கெடுபிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், 3 ஆவது கொரோனா அலை உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் ரஷியா, கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் அதன் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இந்தியாவில் எப்போது வேண்டும் என்றாலும் கொரோனா 3 ஆவது அலை பரவலாம் என்றும், சுற்றுலாத்தலங்கள் பயணம் மற்றும் யாத்திரைகள் போன்றவற்றுக்கு மக்கள் செல்ல வேண்டாம் - அரசுகளும் அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Indian Medical Research Council Warn about Corona 3 rd Wave