இந்திய - நேபாள எல்லையில் திடீர் பதற்றம்.. பெண் பலி..!!
India - Nepal border violent Indian girl died gun shoot
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள இந்திய - நேபாள எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய பெண்கள் ஒரு பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள எல்லையை ஒட்டியுள்ள சிதமார்ஹி என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியப் பகுதியில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். நேபாள பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் பலியாகியிருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்திய நேபாள எல்லையில் பதற்றம் நீடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவிற்கும் - நேபாளத்திற்கும் இடையே நல்ல விதமான உறவு இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதமாக நேபாளத்திற்கு தனி வரைபடம் விட்டதில் இருந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
India - Nepal border violent Indian girl died gun shoot