மனைவியின் தலையை அறுத்து 5 கிமீ கொடூர ஊர்வலம்.! பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா அருகேயுள்ள கசிபுரா பகுதியை சார்ந்தவர் நரேஷ் பாகெல் (வயது 33). இவர் தொலைக்காட்சி பழுதுபார்க்கும் பணியை செய்து வந்த நிலையில்., இவரது மனைவியின் பெயர் சாந்தி தேவி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. 

இவர்கள் இருவருக்கும் நான்கு குழந்தைகள் உள்ள நிலையில்., நரேஷிற்கு மது அருந்தும் பழக்கம் மற்றும் சூதாட்ட பழக்கம் இருந்துள்ளது. இதனை சாந்தி வன்மையாக கண்டித்து வந்ததால்., இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

died, murder, suicide attempt,

இதனைப்போன்ற பிரச்சனை நேற்றும் தொடர்ந்த நிலையில்., ஆத்திரமடைந்த நரேஷ் தனது மனைவியின் கழுத்தை அரிவாளால் துண்டித்து., உடலை வீட்டின் அறையில் வைத்து பூட்டிவிட்டு., அவரது தலையை டப்பாவில் போட்டு சுமார் 5 கிமீ தூரம் நடந்து ஊர்வலமாக சென்றுள்ளார். 

மேலும்., அங்குள்ள மின்கம்பத்தில் மனைவியின் தலையை தொங்கவிட முயற்சித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh wife killed by husband police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->