மனைவியின் உயிர்காக்க கை கொடுத்த கணவன்.. ஒரு மாதமாக ஊசலாடிய உயிர்.. இறுதியில் பெரும் சோகம்.!!
in Saudi Arabia kerala couple electric fire accident husband died
கேரளாவை சேர்ந்த 32 வயதுடைய அனில் நினான் என்பவர் அவரது மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன் அரபு நாட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதியன்று வீட்டில் உள்ள மின்சார பெட்டி ஒன்று மின்கசிவு காரணமாக திடீரென்று வெடித்து சிதறி தீப்பிடித்துக் பற்றிக் கொண்டது.
அப்போது அந்த இடத்தில் இருந்த தனது மனைவியை காப்பாற்ற பெட்ரூமில் இருந்து அனில் நினான் வந்துள்ளார். அப்போது அவர் தீயின் பிடியில் சிக்கி இருந்த மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது அவரும் பலத்த காயம் அடைந்தார். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தின் மூலம் மனைவிக்கும் 10 சதவீத காயங்கள் மட்டுமே அடைந்த நிலையில் தற்போது இவர் உடல்நிலை தேறி ஆபத்தான நிலையை கடந்தார்.
ஆனால், மனைவியை காப்பாற்ற போராடிய கணவனுக்கு 90% தீ பற்றிக் கொண்டதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது நினான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயரம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Saudi Arabia kerala couple electric fire accident husband died