அம்மானு சத்தம் கேட்டுச்சு.. வீடெல்லாம் இரத்தம்....... தாயை கண்டு கதறிய மகன்கள்.. கணவனின் பெரும் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காட்கோபர் மேற்கு பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருபவரின் பெயர் அஞ்சனா (வயது 35). இவரது கணவரின் பெயர் பிரதீப் (வயது 40). இவர்கள் இருவருக்கும் 18 வயதுடைய மகன் மற்றும் 13 வயது மகன் உள்ளார். 

இந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகையிருந்த பிரதீப், தினமும் பணிக்கு செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். மேலும், வீட்டு செலவிற்கும் பணம் தராமல் இருந்து வந்துள்ளார். குடும்பத்தை காப்பாற்ற அஞ்சனா வீட்டுவேலை செய்து வறுமையில் வாடி வந்த நிலையில், பிரதீப்பிற்கு மனைவியுடைய நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் தனது மனைவியுடன் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளான். இந்நிலையில், கணவரின் தொல்லையை தாங்க இயலாத மனைவி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆத்திரத்தில் தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் மகன்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு வியாழக்கிழமை மீண்டும் இல்லத்திற்கு திரும்பியுள்ளார். 

வீட்டிற்கு வந்ததும் மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை தகராறாக முற்றியுள்ளது. இதனையடுத்து இரவில் உறங்கிக்கொண்டு இருந்த அஞ்சனாவை பிரதீப் சிலிண்டரை வைத்து தாக்கி கொலை செய்துள்ளான். தாயாரின் அலறல் சத்தம் கேட்டு மகன்கள் பதறி எழுந்த நேரத்தில், தாய் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். 

இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்த நிலையில், பிரதீப் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று காலை பிரதீப்பை கைது செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai wife murder husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->