தூங்கிக்கொண்டிருந்த கணவனை தூக்கத்திலேயே துடிக்கவைத்த மனைவி.! உல்லாசத்தால் அரங்கேறிய விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வசித்து வருபவரின் பெயர் மனோஜ் (வயது 31). இவரது மனைவியின் பெயர் ரஞ்சு (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை பகுதியில் இருக்கும் தலோஜா நகரில் வாடகைக்கு வீடெடுத்து குடியேறிய நிலையில்., மனோஜுடைய ஊரை சார்ந்த கார்த்திக் (வயது 26) என்ற வாலிபரும் இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். 

died, suicide attempt, murder, killed,

இந்த சமயத்தில்., அந்த பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து., துர்நாற்றம் வீசிய பகுதிக்கு சென்ற கட்டிட தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பையை பிரித்து பார்க்கையில்., அழுகிய நிலையில் ஆணின் பிணம் கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலும் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

illegal affair, affair, couple enjoy,

இந்த விசாரணையில்., பிணமாக கிடந்தவர் மனோஜ் என்பது தெரியவந்ததை அடுத்து., ரஞ்சுவிடம் மேற்கொண்ட விசாரணையில்., எனக்கும் - கார்த்திக்கிற்கும் கள்ளத்தொடர்பானது இருந்தது. இதனால் நாங்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்த விஷயம் மனோஜிற்கு தெரியவந்தது.

இதனால் எனது கணவர் எங்கள் இருவரையும் சத்தம் போட்ட நிலையில்., நானும் - கார்த்திக்கும் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதன் படி சம்பவத்தன்று வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த மனோஜின் உடலை தலையணையால் அமுக்கி கொலை செய்தோம். பின்னர் உடலை மறைத்து கொண்டு சென்று கட்டிடத்தில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai husband killed by wife due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->