பெயிலில் வெளியே வந்து மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்.. பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சிவ்ரி பகுதியை சார்ந்தவர் யாஸ்மீன் பானு (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள சுங்கச்சாவடி பொதுக்கழிவறையில் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் யாஸ்மின் பானுவை, அவரின் கணவர் நசீம் அன்சாரி (வயது 32) கல்லால் அடித்து கொலை செய்தது உறுதியானது. மேலும், அன்சாரியின் மீது அங்குள்ள மாட்டுங்கா, சிவ்ரி, தானே, அந்தேரி, பைதோனி மற்றும் காலாசவுக்கி காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த அன்சாரி சம்பவத்தன்று ஜாமினில் விடுதலையானதும், சிறையில் இருந்த நேரத்தில் மனைவி தன்னை ஒருமுறை வந்து கூட பார்க்கவில்லை என்ற ஆத்திரத்தில் நேராக சிவ்ரிக்கு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. 

சிவ்ரிக்கு சென்ற அன்சாரி, தந்து மனைவி மற்றொரு நபருடன் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் மனைவியிடம் அமைதியாக பேசி கழிவறைக்கு அழைத்து வந்து கல்லால் அடித்து கொலை செய்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. முதலில் தலைமறைவாக இருந்த அன்சாரி, காவல் துறையினரால் பைகுல்லா சந்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Maharashtra wife murder by husband when he return from fail by bail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->