நடன பயிற்சியில் மயக்கமடைந்த சிறுமி.. வேடிக்கை பார்த்த ஆசிரியர்... கண்ணீரில் கதறிய பெற்றோர்கள்.!!
in karnadaga girl student died
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் அமைந்துள்ள பெட்டமங்கலாஓப்ளி டி.கேசாஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் பூஜிதா (வயது 14). இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பில் பயின்று வருகிறார்.
சிறுமி பயின்று வந்த பள்ளியில் நடைபெறவிருந்த ஆண்டுவிழாவினையொட்டி, பள்ளியில் பயின்று வந்த மாணவ - மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெயர் கொடுத்துள்ளனர்.
சிறுமி பூஜிதாவும் நடனப்போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினத்தின் போது பூஜிதா மற்றும் அவரது தோழி நடன பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்த சமயத்தில், நடன பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த பூஜிதா சுருண்டு விழுந்துள்ளார்.
இவரை மீட்ட ஆசிரியர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், பூஜிதாவை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்து அதிர்ச்சியான ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர்கள் பூஜிதாவின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், பூஜிதாவின் உடலை பெற்ற பெற்றோர்கள் அடக்கமும் செய்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்ததில், சிறுமி மயங்கி விழுந்த நேரத்தில் அங்கிருந்த ஆசிரியர் ஏதும் கண்டுகொள்ளாதது போல் இருந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூஜிதாவின் பெற்றோர்கள் நடன ஆசிரியையின் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga girl student died